இந்திய மூவர்ண கொடியில் ஜொலிக்கும் துபாய் புர்ஜ் கலிபா!
துபாய்: இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு உலகின் மிகப் உயரமான
கட்டிடமான புர்ஜ் கலிபா முழுவதும் மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிர்கிறது.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படப் உள்ளது.
இதையொட்டி தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
ராஜ பாதை, செங்கோட்டை உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்
குடியரசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடும் பொருட்டு விழா ஏற்பாடுகள்
தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகளும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை நடை பெறவுள்ள இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக
அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் பங்கேற்கிறார்.
அதனையொட்டி, ஐக்கிய அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ்
கலிபாவில் இந்திய மூவர்ணக் கொடியின் நிறத்தில் விளக்குகளை அமைத்து ஒளிரவிட
அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
