யுரேகா... கிடைத்தது 80 ஆண்டுகால கேள்விக்கான விடை!

யுரேகா... கிடைத்தது 80 ஆண்டுகால கேள்விக்கான விடை!


ஹைட்ரஜன், மிக லேசான தனிமம் என்று 1935ம் ஆண்டு வேதியியல் அறிஞர்கள் கண்டறிந்து தனிமவரிசை அட்டவணையில் வகைப்படுத்தினர்.

இந்த ஹைட்ரஜனை. உலோகமாக மாற்ற முடியுமா என்பதே வேதியியல் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் விடையறியா கேள்வியாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

ஹைட்ரஜனை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்துவதன் மூலம், அதை உலோகமாக மாற்றலாம் என்று அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

ஹைட்ரஜன் தனிமத்தில், 25 ஜிகா பாஸ்கல் அழுத்தத்தை செலுத்தும்போது அது உலோக ஹைட்ரஜனாக மாற்றமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

380 ஜிகாபாஸ்கல் அளவிற்கு அழுத்தம், ஹைட்ரஜனில் செலுத்தப்படும்போது ஹைட்ரஜன் அணுக்கள் பிளவுபடுவதாக முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளநிலையில், தற்போதைய முடிவு, ஒருபெரும் முன்னேற்றமாகவே கருதப்படுகிறது.

ஹைட்ரஜனை உலோகமாக்க மேற்கொண்ட சோதனையில் வைரம் குறித்த அடிப்படை சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டபோது அது தோல்வியிலேயே முடிந்ததால், விஞ்ஞானிகள் அதுதொடர்பான அதேசமயத்தில் சில மாற்று வழிகளை மேற்கொண்டனர்.

ஹைட்ரஜனை ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திற்கு உட்படுத்தும்போது, திட உலோக ஹைட்ரஜன் கிடைத்தபடியால், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு சரியான பாதையில் செல்வதை அறிந்தனர். பின் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் பயனாக, மிக லேசான தனிமமான ஹைட்ரஜனை, உலோகமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தனர்.

ஆய்வின் முடிவில் கிடைத்த உலோகம் கறுப்பு நிறத்தில் இருந்தது. பின் விஞ்ஞானிகள், 465 முதல் 495 ஜிகாபாஸ்கல் அளவிலான அழுத்தத்தை செலுத்தும்போது ஓளிபிரதிபலிக்கத்தக்க உலோகத்தை அவர்கள் கண்டறிந்து உருவாக்கினர்.

இதன்மூலம், மிகலேசான தனிமமான ஹைட்ரஜனை உலோகமாக மாற்ற முடியுமா என்ற 80 ஆண்டுகள் முந்தைய கேள்விக்கு தற்போது விஞ்ஞானிகள் விடை கண்டறிந்து அதை கொண்டாட்டமாகவே கொண்டாடி வருகின்றன