ஜல்லிக்கட்டு தேதியை தள்ளி வைக்க முதல்வர் ஆலோசனை
மதுரை : அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் தங்கி உள்ளார். இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஜல்லிக்கட்டு தேதியை தள்ளி வைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வந்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் முகாமிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அலங்காநல்லூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, முதல்வரின் அலங்காநல்லூர் பயணம் ரத்து செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலங்காநல்லூருக்கு பதிலாக திண்டுக்கல் அருகே உள்ள நத்தம்கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க முதல்வர் நத்தம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அங்கும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு வலுப்பதால் அனைத்து பயண திட்டங்களையும் ரத்து செய்து விட்டு சென்னை திரும்ப முதல்வர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.