ஆப்கன் மீது குண்டு வீச்சு: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

ஆப்கன் மீது குண்டு வீச்சு: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

காபூல்: ஆப்கனில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் பதுங்குமிடம் மீது அமெரிக்க ராணுவம் சக்தி வாய்ந்த மெகா குண்டு வீசப்பட்டதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்து வரும் ஆப்கனிஸ்தானில், அரசு படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டெனால்ட் டிரம்ப், தலிபான் மற்றும்ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக முதல் முறையாக, 'அனைத்து குண்டுகளின் தாய்' என அழைக்கப்படும் , 21 ஆயிரம் பவுண்டு எடைஜி.பி.யு.,43பி என்ற அதிக சக்தி வாய்ந்த ''மெகா' குண்டு, ஆப்கானின் நங்ககார் மாகாணத்தில் அச்சின் மாவட்டத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை குறி வைத்து விமானம் மூலம் அமெரிக்க ராணுவம் வீசியது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
 
 ஆப்கானில் ஐ.எஸ். புதுங்கியுள்ள பகுதி மீது அமெரிக்கா முதன் முறையாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கார்கன் மாகாணத்தில் உள்ள கணவாய்ப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தின் மீது அமெரிக்கா 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. MOAB ''மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதன் பாதிப்பு 300 மீட்டர் தொலைவிற்கு பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் தாக்குதல் நடந்ததை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் உறுதி செய்துள்ளது,. மேலும் பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.எஸ் மீதான தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிரான அதிபர் டிரம்பின் மிகப்பெரிய நடவடிக்கை என கூறியுள்ளது.

 ஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த 'தாய்குண்டு' தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் அடக்கம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இது வரை பயன்படுத்தாத அதி சக்தி வாய்ந்த குண்டை அமெரிக்கா ஆப்கனில் அதிரடியாக வீசி தாக்கியது. இதில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாம் அழிக்கவே இந்த முயற்சி என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. பலியானவர்களில் கேரளாவை சேர்ந்த சிலரும் இங்கு தங்கி இருந்தனர் என பாதுகாப்பு வட்டார தகவல் தெரிவிக்கிறது. கேரளாவை சேர்ந்தவர்கள் எத்தனை பதுங்கி இருந்தனர் என்பது உறுதியாக ஏதும் தெரியவில்லை.


கோவில் மணி ஓசையும், அதன் பின்னணி அறிவியலும் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோவில் மணி ஓசையும், அதன் பின்னணி அறிவியலும் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.

 ஆகம சாஸ்திரங்களின் படி கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஒழி எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது, உங்களுள் நல்ல ஆற்றல் பெருக செய்கிறது.

 கோவில் மணி ஒலியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. ஆம், கோவில் மணி மனிதனின் மூளை செயற்திறன் மேலோங்க செய்யும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கிறது.

 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கோவில் மணிகள் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களால் ஆனவை ஆகும். இதில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றன.

 கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு கூர்மையான சப்தம் உற்பத்தியாகிறது, இந்த எதிரொலி குறைந்தபட்சம் 10 - 15 நொடி வரை நீடிக்கும். இந்த எதிரொலியின் காலம், உங்கள் உடலில் உள்ள ஏழு குணப்படுத்தும் மைய்ய புள்ளிகளை செயல்பட வைக்க போதுமானதாக இருக்கிறது.

 மேலும், இந்த ஒலி உங்களுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றியும், உங்கள் கவன குவியல் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

 கோவில் மணி ஒலி, கவன குவியலை மேம்படுத்தி உங்களை விழிப்புடன் இருக்க செய்கிறது. மேலும், மூளையின் செயற்திறனை இதன் மூலம் அதிகரித்து, உங்கள் வேலையில் நேர்மறையாக செயல்பட செய்கிறது. இதன் மூலம் மனம் அமைதி அடையும், நிம்மதி பெறும்.


அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி!

அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி!

அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி! 

 

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேற்று இரவு நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் அங்கு ஒரு மினி கேரளாவே காலியாகிவிட்டதாக கூறுகிறார்கள் இந்ததிய உளவுத்துறையினர்.
கடந்த வருடம், பெண்கள் உட்பட 21 மலையாளி முஸ்லிம்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த தகவல் இந்தியாவுக்கு கிடைத்திருந்தது. முதலில் காணாமல் போய்விட்டதாகத்தான் அவர்களை போலீசார் தேடி வந்தனர். ஆனால் பின்னர்தான் அவர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது.
சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளாக மாறிய அவர்கள், அதன்பிறகு ஆப்கானிஸ்தானின் நன்கார்ஹர் நகரில் தங்க வைக்கப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டனர்.

 இந்த நபர்கள் அனைவருமே ஒரு இடைத் தரகர் மூலம் ஆப்கனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆப்கனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இந்தியாவிலிருந்தே அதிகம் பேரை ஈர்க்க ஐஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்தது.

நேற்று இரவு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதலில் கேரளாவிலிருந்து சென்று ஆப்கனில் தங்கியிருந்த 21 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
 உளவுத்துறை அதிகாரி ஒருவர், 'இந்த தாக்குதல் இப்போது நடைபெறும் என்று முன்கூட்டியே நாங்கள் கணிக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து நாச வேலை செய்ய நினைப்போரின் சிந்தனையை மாற்றக் கூடியது. ட்ரம்ப் ஏற்கனவே தனது பிரசாரத்தின்போது கூறியதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிகக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்' என்றார்.
 
 கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருகிறது. அங்குள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தால் வலை வீசப்படுகிறார்கள். இந்த ஆபத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் பலவும் தங்கள் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி அவர்களை நன் மார்க்கத்தில் திருப்ப முயன்று வருகின்றன.
 
 ஆப்கனில் நேற்று நடந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அறிவிப்பை வெள்ளைமாளிகை வெளியிடவில்லை. அதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த 21 பேர் இறந்திருக்க கூடும் என்றபோதிலும், இதை மினி கேரளா என்ற கோட்வேர்ட் வைத்தே அழைக்கிறது இந்திய உளவுத்துறை.
 
 
சசிகலா கும்பலை 'கழற்றிவிட' அமைச்சர்கள் ஆலோசனை!

சசிகலா கும்பலை 'கழற்றிவிட' அமைச்சர்கள் ஆலோசனை!

பிளவுபட்ட, அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, பழனிசாமி - பன்னீர் என, இரு தரப்பிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள், ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சசிகலாவையும், அவர் உறவினர்களையும் ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்க ஆலோசித்து வருகின்றனர்.ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர்.சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏ.,க்கள், 33 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, இரு அணியினரும் கோரிக்கை விடுத்ததால், சின்னம் முடக்கப்பட்டது. இரு அணியினரும், தேர்தலில் தனித்தனியே களம் இறங்கினர். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. பல இடங்களில், அடிதடி நடந்தது. தினகரன் வெற்றிக்காக, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கியதற்கான, ஆவணங்கள் சிக்கின.இதன் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் வீட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானது.இது, தொண்டர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடம், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கட்சி இரண்டாக பிளவுபட்டதே, இப்பிரச்னைகளுக்கு காரணம்.எனவே, இரு அணியும் இணைந்தால், அரசை சிறப்பாக நடத்த முடியும் என, இரு தரப்பு நிர்வாகிகளும் எண்ணத் துவங்கி உள்ளனர்.

சசிகலா குடும்பத்தினரை விலக்கி விட்டால், இரு அணிகளும் இணைவதில் சிரமம் இல்லை என, பன்னீர் அணியினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களிடம், ரகசிய பேச்சு நடந்து வருகிறது.கர்நாடக மாநில, அ.தி.மு.க., முன்னாள் செயலர் கிருஷ்ணராஜ், 'இரு அணிகளும் இணைய வேண்டும்; கட்சி சின்னத்தை மீட்க வேண்டும். 'இரு அணித் தலைவர்களும் இணைய மறுத்தால், கட்சி தொண்டர்கள் அனைவரும், பொதுச்செயலர் தேர்தலை நடத்தும்படி, தேர்தல் கமிஷனுக்கு, கடிதம் கொடுப்போம்' என தெரிவித்துள்ளார்.இதே கருத்தை, பலரும் வலியுறுத்த துவங்கி உள்ளதால், சசிகலா குடும்பத்தை ஆதரிப்பவர்கள், இதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது
டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்

டெல்லியில் 32-வது நாளாகப் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களை தள்ளுபடி, தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 32-வது நாளாகப் போராடி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன முறையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னரே அறிவித்ததைப் போல பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை, இம்மாதிரியான போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் சேலை அணிந்து நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூலித்தொழிலாளியாக பணிபுரியும் முதல்வர்

கூலித்தொழிலாளியாக பணிபுரியும் முதல்வர்

ஐதராபாத் : 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிய உள்ளதாக தெலுங்கானா முதலவர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். கூலி தொழிலாளியாகும் முதல்வர் : கட்சி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சந்திரசேகர ராவ், தெலுங்கானா விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 2.40 லட்சம் டன் உரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தான் 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் வருடாந்திர மாநாடு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு நிதி திரட்டுவதற்காக அமைச்சர்கள், கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் 2 நாட்கள் கூலித் தொழிலாளிகளாக பணிபுரிய சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் அவரும் இரண்டு நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிய இருக்கிறார். இதற்கு சந்திரசேகர ராவ், தனது கட்சியின் நிறத்தின் அடிப்படையில் இளஞ்சிவப்பு தொழிலாளர் தினம் என்று பெயரிட்டுள்ளார்.