எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!

எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!



ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சைஎலுமிச்சையில் வைட்டமின்களான ஏ, சி, பி1, பி6, கனிமச்சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், பெக்டின், மக்னீசியம், போலிக் அமிலம், பயோ-ப்ளேவோனாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் உடலைத் தாக்கும் நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

இத்தகைய எலுமிச்சை தற்போது பெரும்பாலானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க உதவும் என்பது தெரியுமா? அதுவும் அதற்கு அதன் தோல் மட்டுமே போதுமானது. இக்கட்டுரையில் மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டள்ளது.

எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது.
10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.
8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)பணியிடங்களுக்கும், இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்(TGT) பணியிடங்களுக்கும், பட்டம், டிப்பளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் (PRT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்தியா முழுவதும் 77 நகங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf
’ஹெல்ப்லைன்’ திட்டம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை

’ஹெல்ப்லைன்’ திட்டம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை



 உளவியல் ஆலோசனைகள் வழங்க, ’ஹெல்ப்லைன்’ திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது. 14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,’ஹெல்ப்லைன்’ திட்டம்.பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.


புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், ’ரேங்கிங்’ முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, ’ஹெல்ப்லைன்’ திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களை தெரிவிக்கலாம்.அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும். இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன் கூறினார்.

வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட சில ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குகளும் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகளைத் திரும்ப பெறாவிட்டால், அதை எதிர்த்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் டிசம்பர் 21 ஆம் தேதி வழக்கு தொடரப்படும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் அரசு ரத்து செய்யாவிட்டால், ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜனவரி நான்காவது வாரம் முதல் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
அம்ருதா உடன் யார் இவர்

அம்ருதா உடன் யார் இவர்

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் அதிகளவு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. ஆனால், ''அ.தி.மு.க என்ற கட்சியையும் இரட்டை இலையையும் 30 ஆண்டுக் காலம் காப்பாற்றி வழிநடத்திய ஜெ.வின் புகழைக் கெடுக்கும் விதமாக வெளியே வரும் சர்ச்சைகளைக் கிள்ளி எறியத் துளியும் ஆர்வம் காட்டவில்லை'' என்ற குற்றச்சாட்டுகள் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் மீது கட்சி நிர்வாகிகளே ஆதங்கப்பட ஆரம்பித்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளை அறிந்த முதல்வர் எடப்பாடி, யார் அந்த பொண்ணு என்று முதல் முறையாக விசாரித்துள்ளார். உடனடியாக பெங்களூருவில் களம் இறக்கிய அதிகாரிகள் கொடுத்துள்ள அறிக்கையில், அம்ருதாவை வேண்டும் என்றே சிலர் தூண்டி விடுகின்றனர். ஆரம்பத்தில் சைலஜா மகள் என்று அறிமுகமான அம்ருதா இன்று நான் ஜெயலலிதா மகள் என்று டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சென்றுள்ளார். அறிக்கையில், அம்ருதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விசாரணை செய்துள்ளனர். அதில், ''அம்ருதா கன்னடத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அம்ருதா முன்பே திருமணமாகி விவாகரத்து பெற்று சைலஜாவுடன் வாழ்ந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அம்ருதாவுடன் இளைஞர் ஒருவர் இருப்பதுபோன்ற புகைப்படத்தைப் பற்றியும் விசாரணை செய்துள்ளனர். அந்த இளைஞனின் பெயர் எம்.டி. முசரஃப் சிக். ஆரம்பத்தில் சைலஜா குடும்பத்தில் ஆக்டிங் டிரைவராக வந்துசென்றுள்ளார். சைலஜா, அம்ருதா குடும்பத்தின் இந்து முறைப்படியான வாழ்க்கை முசரஃப் சிக்குப் பிடித்துப் போகவே தன்னையும் ஒரு இந்துவாக மதமாற்றம் செய்துள்ளார். தற்போது அம்ருதா முசரஃப் சிக் பாதுகாப்பில் இருந்துவருகிறார்' என தெரிவித்துள்ளனர்.