ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மெளன அஞ்சலி
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து திடீர் என மெளன அஞ்சலி செலுத்தினார். சுமார் 40 நிமிடம் தொடர்ந்து கண்மூடி தியானம் செய்த அவர் பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை சுற்றிவந்தார்.
சசிகலா அதிமுக சட்டப் பேரவைக் குழு குழு தலைவராக கடந்த ஞாயிறு அன்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சசிகலா ஆட்சி அமைக்க முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துள்ளது. இதற்கிடையே ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்ப தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் உள்ள 31 எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.