ஜெயலலிதா பிறந்த நாளில் அடுத்த கட்ட அறிவிப்பு: ஜெ.தீபா பேட்டி

ஜெயலலிதா பிறந்த நாளில் அடுத்த கட்ட அறிவிப்பு: ஜெ.தீபா பேட்டி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
முதலில், சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தீபா. அதன் பின்னர், ஆதரவாளர்கள் பலர் சூழ்ந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடுவேன் என தீபா தெரிவித்தார். மக்கள் கருத்தை அறிந்த பின் அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் தெரிவித்தார்.