30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
சென்னை : இனி சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு ரயிலில் வெறும் 30 நிமிடங்களில் சென்று விடலாம். நம்புங்கள்...இது உண்மை தான்.
ைஹப்பர் லுாப்:
அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப் என்ற நிறுவனம் அதிவிரைவு ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே மேம்பாலம் அமைத்து, அதில் பெரிய குழாய் போன்ற அமைப்பிற்குள் தண்டவாளம் அமையும்.
இதில் மணிக்கு 1200 கி.மீ., தூரம் பயணிக்கும் அதிவிரைவு ரயில் இயக்கப்படும். முதல் கட்டமாக இந்த திட்டத்தை சென்னை - பெங்களூரு இடையே நிறைவேற்ற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெறும் 30 நிமிடங்களில் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு செல்லலாம்.
ஜப்பான் மற்றும் சீன வல்லுநர் குழுக்களைக் கொண்டு இத்திட்டத்திற்கான பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹைப்பர்லூப் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டில், சென்னை - பெங்களூரு, சென்னை - மும்பை, புனே - மும்பை, பெங்களூரு - திருவனந்தபுரம், மும்பை - டில்லி ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ரயில் தட குழாயின் மேற்பகுதியில் சோலார் தகடுகளும், மேம்பால தூண்களில் காற்றாலைகளும் பொறுத்தப்பட உள்ளன. காந்தப்புல ஆற்றலின் மூலம் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.