ரயில் கட்டணத்தை உயர்த்த சி.ஏ.ஜி., பரிந்துரை

ரயில் கட்டணத்தை உயர்த்த சி.ஏ.ஜி., பரிந்துரை


புதுடில்லி:செயல்பாட்டு செலவினங்களை ஈடு செய்யும் வகையில், ரயில் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தலாம் என, ரயில்வே அமைச்சகத்துக்கு, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, சி.ஏ.ஜி.,யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரயில்வேயின் செயல்பாட்டு செலவை ஈடுகட்டும் வகையில்,
பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை படிப்படியாக உயர்த்த லாம். அதுபோலவே, புறநகர் ரயில் சேவைக்கான கட்டணங்களிலும் மாற்றம் செய்யவேண்டும்.
மேலும், கட்டண சலுகை அளிக்கும் வகையில் கொடுக்கப்படும் ரயில்வே பாஸ்களுக்கான கட்டணத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். ரயிலில் பல்வேறு பிரிவினருக்கு அளிக்கப்படும் கட்டண சலுகைகளையும் குறைக்க வேண்டும். ரயில்வேயின் வருவாயை உயர்த்தும் வகையிலும், செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்யும் வகையிலும், இந்த கட்டணங்களை படிப்படியாக உயர்த்தவேண்டும்.
இத்துடன், ரயில்வேயின் பணித் திறனை மேம்படுத் தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கணக்குகளில் செய்யப்படும் மோசடிகளையும் தடுக்க வேண்டும். கடந்த, 2010 - 11 மற்றும், 2014 - 15ம்நிதியாண்டு களில், 3,548 கோடி ரூபாய் மதிப்புள்ள, 560 கணக்கு
தவறுகள், தவறான பிரிவுகளின் கீழ் கணக்கு காட்டியது போன்ற தவறுகள் நடந்துள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.
சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டண வளர்ச்சியும் குறைவாக உள்ளது. இதை உயர்த் திடதேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.