ஜெ. தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டாரா? உளறிய நடராஜன்! போட்டு உடைத்த சேதுராமன்!

ஜெ. தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டாரா? உளறிய நடராஜன்! போட்டு உடைத்த சேதுராமன்!


தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களில் அதிமுகவின் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். இது சசிகலா அணியினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர்.சேதுராமன் பங்கேற்று பேசினார். அப்போது, முதல்வர் நாற்காலியில் உட்கார எங்களுக்கு ஒரே ஒரு தலையணை போதும் என சசிகலா கணவர் நடராஜன் கூறியதாக சேதுராமன் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது சசிகலா கணவர் நடராஜன் பிரஸ்மீட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த பிரஸ்மீட் முடிவில் ஆப் த ரெக்கார்டாக சில பத்திரிகையாளர்களிடம் நடராஜன் பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.
அப்போது இன்னும் 2 மாதத்தில் முதல்வர் பதவியை நாங்கள் கைபற்றுவோம் என்று கூறியுள்ளார். தற்போது தானே தேர்தல் முடிந்துள்ளது, அதற்குள் எப்படி முடியும்? மீண்டும் தேர்தல் என்றால் பல ஆயிரம் கோடி செலவாகுமே என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த நடராஜனோ, நாங்க முதல்வர் ஆவதற்கு எதுக்கு அத்தனை ஆயிரம் கோடி செலவு செய்யனும்? ஒரே ஒரு தலையணை போதுமே… முதல்வர் ஆகிவிடுவோமே என நடராஜன் கூறியிருந்தார்.
இந்த தகவலை என்னிடம் பத்திரிகையாளர்கள் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட சேதுராமன் கூறியுள்ளார்.