கடனை ஒரே தவணையில் அடைக்க தயார்: லண்டனில் உள்ள மல்லையா ட்விட்டரில் தகவல்

கடனை ஒரே தவணையில் அடைக்க தயார்: லண்டனில் உள்ள மல்லையா ட்விட்டரில் தகவல்

லண்டன்: வங்கிகளில் வாங்கிய கடனை ஒரே தவணையில் அடைக்க தான் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார். வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா, ட்விட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான கடனாளிகள் ஒரே தவணையில் கடனை திருப்பி செலுத்தியுள்ளபோது தனக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்று அவர் வினவியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தான் இதனை தெரிவித்தபோது வங்கிகள் அதை பரிசீலிக்க மறுத்துவிட்டதாக மல்லையா கூறியுள்ளார்.
நியாயமான அடிப்படையில் கடனை திருப்பி செலுத்த பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் தலையிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பது தனது விருப்பம் என மல்லையா கூறியுள்ளார். எல்லா நீதிமன்றங்களையும் தான் மதிப்பதாக கூறியுள்ள அவர், நியாயமான விசாரணையின்றி மத்திய அரசு தன்னை குற்றவாளியாக கருதுகிறது என குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டையே உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் எடுத்துக்காட்டுவதாகவும் மல்லையா கூறியுள்ளார்.