இந்தியாவின் மிக நீண்ட பாலம் : மோடி திறந்து வைக்கிறார்
இந்தியாவின் மிக நீண்ட பாலம் : மோடி திறந்து வைக்கிறார்
கவுகாத்தி: இந்தியாவில், அசாம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை நதி மூலம் இணைக்கும் மிகநீளமான பாலம் நாளை திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். பிரதமரின் மோடியின் மூன்றாண்டு ஆட்சி நிறைவடைந்ததையொட்டி நாளை(மே-26)அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதில் அசாமின் கவுகாத்தியில், சாதியா என்ற பகுதியில் இருந்து அருணாச்சல் பிரதேசத்தின் இட்டா நகரில் உள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆகிய நதிகளின் குறுக்கே சுமார் 9.2 கி.மீ.தொலைவிற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.இது இந்தியாவின் மீக நீண்ட பாலம் என கூறப்படுகிறது.
இந்த பாலம்சீன எல்லை வரை உள்ளதாகவும், நமது ராணுவம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் ஆகிய பயன்பாட்டிற்காக இந்த பாலம் உபயேகிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாலம் 10 முக்கிய அம்சங்கள்: 1) அசாமின் கவுகாத்தியில் இருந்து 540 கி.மீ.தொலைவில் உள்ள சாதியா என்ற பகுதியில் இந்த பாலம் துவங்கி, அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தோலா என்ற பகுதியில் இந்த பாலம் முடிகிறது.2) கடந்த 2011-ம் ஆண்டு மத்தியில் காங்.
ஆட்சியின் போது ரூ.950 கோடி மதிப்பீட்டில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் துவங்கின.3) 2015-ம் ஆண்டு பா.ஜ. ஆட்சிக்கு வந்ததும் பணிகள் தீவிரமடைந்து இதன் கட்டுமான திட்டச் செலவு ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.4) 9.2 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா -ஓர்லியில் கட்டப்பட்டுள்ள கடல்மேல் பாலத்தைவிட 30 சதவீதம் நீளமானது.5) இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் அசாம், அருணாச்சல் இடையேயான போக்குவரது நேரம் 4 மணி நேரமாக குறையும்.
.6) இந்திய- சீன எல்லையில் பிரச்னை என்றால், ராணுவ ஜவான்கள், இந்த பாலத்தின் வழியாக உடனடியாக சீன எல்லை சென்று விட இயலும்.7) ராணுவ வாகனங்களில் சுமார் 60 டன் எடை கொண்ட பீராங்கிகள், ராணுவ டாங்கிகள் இந்த பாலம் வழியாக எளிதாக சீன எல்லையை சென்றடைய முடியும்.8) ராணுவம் மட்டுமின்றி, இரு மாநிலங்களின் வர்த்தக போக்குவரத்திற்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும்.9) தற்போது இரு மாநிலங்களுக்கிடையே உள்நாட்டு விமான சேவை இல்லை. இருப்பினும் இந்த பாலம் இரு மாநில மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.10)நாளை அசாம் வரும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இந்த பாலத்தை திறந்து வைக்கிறார். இதில் அசாம் மாநில பா.ஜ. முதல்வர் சர்பானாந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.