இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...
இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...
காணும் இடமெல்லாம் பச்சை பசேலென்று புற்களும், மரம், செடி, கொடிகளும் உங்களை பச்சையாக மாற்றிவிடும் அளவுக்கு மழை பெய்து கொழிக்கும்..
உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் பகுதியாக அறியப்படும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி போன்று எப்போதும் சாரல் மழை பெய்துகொண்டே இருக்கும் இடங்கள் இன்று உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத தலங்களாக திகழ்கின்றன. இங்கு வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து குவிகின்றனர். அப்படி என்னதான் இருக்கு...
மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிரபுஞ்சி, தலைநகர் ஷில்லாங் தவிர ஜெயின்டியா மலைகள், மேற்கு மற்றும் கிழக்கு கரோ ஹில்ஸ் ஆகிய இடங்களும் எண்ணற்ற பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகின்றன.
மேகாலயாவின் காடுகளில் காணப்படும் அரிய வகை குரங்கினமான ஹூலாக் ஜிப்பான்.
அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.
மவ்ளினோங் கிராமத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய அருவி.
ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்ளினோங் கிராமம். உலகின் வெகு சுத்தமான கிராமமாக இது அறியப்படுகிறது.
ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் ஓடும் தாவ்கி நதி.
உள்ளூர் மலைவாழ் மக்கள் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு அவர்களுடன் சேர்ந்து பழகும் முறை, அவர்களின் உணவுகளை சுவைக்கும் அனுபவம் என சிரபுஞ்சி உண்மையிலேயே சொர்க்கம்தான்.
ஷில்லாங்கிலுள்ள மிகப்பெரிய பாரா பஜார்.