சக்தி வாய்ந்த மலர் சிகிச்சை (The power of flower therapy)
மலர்களும் நறுமணமும் நம் வாழ்வும் (Flower, fragrance and more)
பழைய நண்பரைச் சந்திக்கச் செல்கிறீர்கள், மருத்துவமனையில் இருப்பவரைச் சந்திக்கச் செல்கிறீர்கள், இரவு விருந்திற்குச் செல்கிறீர்கள் - இப்படியான எல்லா சூழ்நிலைகளுக்கும் மலர்கள் கச்சிதமாகப் பொருந்தும். மலர்களின் அப்பழுக்கற்ற அழகும் நறுமணமும், உங்கள் எந்த மனநிலைக்கும் ஏற்ற சூழ்நிலையை அளிக்கும்.
மனநிலையை மேம்படுத்துவது மட்டுமின்றி, மலர்கள் இன்னும் பல மாயங்களைச் செய்ய வல்லவை என்பது உங்களுக்குத் தெரியுமா? சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மலர்கள் பயன்படுகின்றன என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரை.
பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது மனக் கலக்கம், தூக்கமின்மை, திடீர் மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும், இவற்றைச் சரிசெய்வதில் மலர் சிகிச்சை நன்கு பலனளிக்கிறது என்று கூறப்படுகிறது.
பெண் இனப்பெருக்க சுழற்சியுடன் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ளன, அவற்றுக்கு மலர் சிகிச்சை மிகவும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி
(பொதுவாக சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரை நீருக்கும் வலி, வழக்கமாக இத்துடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் காணப்படும்) போன்றவற்றை குணப்படுத்துவதிலும் மலர் சிகிச்சை சிறந்த பலனளிக்கிறது என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சில வகை தலைவலிகள், ஒற்றைத்தலைவலி, நடத்தை சார்ந்த கோளாறுகள் போன்றவற்றுக்கும் மலர் சிகிச்சை உதவுவதாகக் கூறப்படுகிறது.
மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கும் மலர் சிகிச்சை உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. லேசான திடீர் மனநிலை மாற்றங்கள் முதல் கடுமையான மன இறுக்கம் வரை உள்ளவர்கள் பங்கேற்று நடத்தப்பட்ட சில ஆய்வுகளில், அவர்களுக்கு பிரச்சனை குறைந்ததாகத் தெரியவந்துள்ளது.
மலர் சிகிச்சை என்பது என்ன? (What exactly is flower therapy?)
இணையாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் உடல்நலம் சார்ந்த ஸ்பா செயல்முறைகளால் மலர் சிகிச்சை இப்போது மிகவும் பிரபலமாகிவருகிறது, எனினும் இது புதிய கருத்து, மருத்துவ முறையில் இது நம்பகமானதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. எனினும், 19ஆம் நூற்றாண்டில் இருந்தே மலர் சிகிச்சை என்ற கருத்து இருந்துவந்துள்ளது, டாக்டர். எட்வர்ட் பேஷ் என்ற இங்கிலாந்து மருத்துவர், மலர் சிகிச்சை குறித்த தனது ஆராய்ச்சித் தத்துவத்தை உலகிற்கு வழங்கினார்.
மலர் சிகிச்சை எப்படி வேலை செய்கிறது? (How does flower therapy work?)
மலர் சிகிச்சையின் முன்னோடியும், பேஷ் மலர் சிகிச்சைகள் எனும் அமைப்பின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தவருமான டாக்டர். பேஷ் அவர்களின் கருத்துப்படி, உணர்வுகள், மன அழுத்தம் மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு, கண்டுகொண்டு அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் மலர் சிகிச்சை செயல்படுகிறது. உணர்வுரீதியான நலத்தை அடைய மலர் சிகிச்சை உதவுகிறது, ஆகவே அது மனநலத்துடன் தொடர்புடைய உடல் பிரச்சனைகளைச் சரி செய்வதிலும் இது உதவுகிறது என்று கூறப்படுகிறது.
மலர் சிகிச்சையை, இணையான ஒரு முக்கியமான சிகிச்சை முறையாக ஏற்றுக்கொள்வது என்பது, நமது மனநலத்திற்கும் நமது முழு உடல்நலத்தின் மீது அது ஏற்படுத்தும் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பை நாம் ஏற்றுக்கொள்வதாகும்.
ஆகவே, அடுத்த முறை உங்களுக்கு மாதவிடாய் வயிற்று வலி ஏற்படும்போது அல்லது மாதவிடாய் முற்றிலும் நிற்கும் அறிகுறிகளால் நீங்கள் சிரமப்படும்போது, மலர் சிகிச்சையைப் பற்றியும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்!
