ஜம்மு - காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்! Monday, 1

ஜம்மு - காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்! Monday, 1

ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 4.28 மணியளவில் ஜம்மு - காஷ்மீர் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்களில் அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தொடரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.