தமிழகத்தை கதிகலங்க வைத்த சிறுமி ஹாசினி படுகொலை! முதல்வர் ஓபிஎஸ் அதிரடி உத்தரவு

தமிழகத்தை கதிகலங்க வைத்த சிறுமி ஹாசினி படுகொலை! முதல்வர் ஓபிஎஸ் அதிரடி உத்தரவு


சென்னையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி வழக்கில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
போரூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 7 வயது சிறுமி ஹாசினி, அதே குடியிருப்பை சேர்ந்த ஜஸ்வந்த் என்ற 22 வயது பொறியாளரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்தது.
பலர் இனியும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.