பாவனாவை ஏன் கடத்தினோம்? சுனில் பகீர் வாக்குமூலம்
சென்னை: மலையாள நடிகை பாவனா ஏன் கடத்தினோம் என்பது குறித்து அந்தக் கடத்தலின் முக்கிய குற்றவாளியான சுனில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த வாரம் ஓடும் காரல் நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகினர் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியும் பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநருமான சுனில் உள்ளிட்ட 9 போரை போலீலார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சுனிலிடம் காவல் துறையினர் பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், பாவனாவை மிரட்டி பணம் பறிக்கவே அவரை கடத்தினோம். இதனால் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை விடியோவாக எடுத்து மிரட்டினோம்.
இதைப் பார்த்து அவர் பயந்து பணம் கொடுத்துவிடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் போலீஸிடம் புகார் அளித்துவிட்டார் என்று கூறினார்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கும் நபர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அந்தத் தகவல்களை எல்லாம் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் அது தொடர்பான செய்திகளையும் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.