எதிர்மறையான விஷயங்கள் பட்ஜெட்டில் இல்லை: சிஐஐ தமிழ்நாடு
இந்த பட்ஜெட்டில் எதிர்மறையான எந்த விஷயங்களும் இல்லை என சென்னையில் நடந்த இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. நேற்று நடந்த பட்ஜெட் கலந்தாய்வுக் கூட்டத்தில் சிஐஐ உறுப்பினர்கள் கூறியதாவது:
ரமேஷ் கய்மல், தலைவர் சிஐஐ:
இந்த பட்ஜெட் வரவேற்கத்த குந்த பட்ஜெட். மரபுசாரா எரிசக் திக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. 20,000 மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டிருப்பது சரியான இலக்கு ஆகும். அதேபோல எப்ஐபிபி நீக்கப்பட்டிருப்பதன் காரணமாக அந்நிய முதலீடுகள் உயர்வதற் கான வாய்ப்பு இருக்கிறது.
விக்ரம் கிர்லோஸ்கர் துணைத்தலைவர், டொயோடா கிர்லோஸ்கர்:
ஆந்திரா தலைநகர் அமராவதியில் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற முறையை புதிதாக அமைக்கப்படும் நகரங்களுக்கும் வழங்கலாம். பல விஷயங்களை இந்த பட்ஜெட் பேசினாலும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உருவாகியுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் இல்லை.
பி.சந்தானம், நிர்வாக இயக்குநர் செயின்ட் கோபைன்:
எந்தவிதமான எதிர்மறை விஷயங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை. நிலையான பட்ஜெட்டாக இருக்கிறது. அரசாங்க முதலீடுகள் அதிகரித்துள்ளன மற்றும் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை வழங்கியது முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். சிறு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரிச்சலுகை காரணமாக பெரிய நிறுவனங்கள் பிரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஸ்ரீராம் சுப்ரமணியா, நிறுவனர் இன்டெகரா:
விவசாயத் துறைக்காக விவசாய கடன் தொகையை அதிகரித்திருப்பது உள்ளிட்ட விஷயங்கள் சாதக மாகும். அதேபோல பயிர் காப்பீடு முந்தைய ஆண்டை விட அதிகம் வழங்கி இருப்பதும் வரவேற் கத்தக்கது. ஆனால் விவசாய துறைக்கான இயந்திரங்கள் மற்றும் உணப்பொருட்கள் வீணா வது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.